Latest News

  

ஆசிரியர் திட்டியதால் லாரல் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை - பரபரப்பான தகவல்!!



பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று (26/09/2012 புதங்கிழமை) காலை வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமதூரில் உள்ள மாணவர்கள் பலர் லாரல் பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கற்பித்தல் முறைபலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் முஸ்லீம் மாணவர்களுக்கு வெள்ளிகிழமை ஜும்-ஆ தொழுக்கைக்கு கூட அனுமதிக்காத பள்ளியில் தான் நமதூர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது...

குறிப்பு:
நமதூரில் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இஸ்லாமிய சட்டங்கள் பற்றி அறியபடுத்தாமல் உலக படிப்பின் ஆசையில் மயங்கிவிட்டனர். நமது மார்கத்தில் தற்கொலை ஹராம் என்று உங்கள் குழந்தைக்கு தெறியுமா? அல்லது நீங்கள் தெறியபடுத்திவுள்ளீர்களா? அன்னிய பெண்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகள் படிக்கின்றதே அங்கு நம் மார்க்க சட்டம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது.... இதெல்லாம் உங்களுக்கு சொன்னால் தெரியாது....தெரிந்தாலும் புரியாது...... உங்கள் குழந்தை வளர்ப்பை பற்றி அல்லாஹ்விற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்............!


1 comment:

  1. பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.