Latest News

ஈரானில் சோகம் : கடும் நிலநடுக்கத்திற்கு 250 பேர் பலி


ரமலான் பண்டிகைக்கு தயாராகி கொண்டிருந்த ஈரான் நாட்டு மக்கள் பலரும் நிலநடுக்கத்தில் சிக்கி 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவில் 2 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 6.3 என பதிவாகியது. கிழக்கு அஜர்பைஷானில் உள்ள வர்ஷகான், தப்ரீஸ் அஹர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் அடியோடு பெரும் தேசத்தை சந்தித்திருக்கிறது. வீடுகளை இழந்தவர்கள் தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு பொருட்களாக ரொட்டித்துண்டுகளும், குடிநீரும் வழங்கப்பட்டன. பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 கிராமங்கள் முழுமையாக பாதிக்ப்பட்டுள்ளதாகவும், ஏனைய 60 கிராமங்கள் 50 சதம் முதல் 80 சதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கடந்த 2003 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 25 ஆயிரம் பேர் பலியாயினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.