Latest News

பிரதமர் பதவிக்கு சோனியா தகுதி உடையவர்தாம்: கலாம்!


பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி தகுதி உடையவர்தாம் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

அப்துல் கலாம் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், ‘கடந்த 2004ஆம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது அவரை பெரும் சர்ச்சைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி விமர்சித்து வருகின்றனர்.

சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கலாமை சுயநலமிக்கவர், போலி வேஷக்காரர் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து இன்று சென்னையில் அப்துல் கலாமிடம் கேட்டபோது:

2004ஆம் ஆண்டில் சோனியாவை பிரதமராக அறிவிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை என எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். அரசியலமைப்பின்படி அவர் பிரதமராவதற்கு தகுதி உடையவர். உச்ச நீதிமன்றமும் அவரது குடியுரிமையை உறுதி செய்தது.
அதனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அவர் விருப்பப்பட்டால் அவரை பிரதமராக்கலாம் என கருதினேன். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அவர் தலைமை வகித்து மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார் என கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.