Latest News

  

5 பவுன் நகையை சுட்ட காகம்

 

பாட்டியிடம் வடை சுட்ட காகம் போய் இன்று நகை சுட்ட காகம் காலத்தின் மாற்றத்திர்க்கு இதுவும் ஒரு எடுது காட்டு

நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது பள்ளியில் படிதிருக்கிறோம் பாட்டி சுட்ட வடையை காக்கை சுட்டு சென்ற கதை காலத்துக்கு ஏற்றாபோல் காக்கையும் மாறிவிட்டது எத்தனை காலத்துக்குதான் வெறும் வடையும், கறியும், மீனையும் தூக்கி கொண்டிருக்கும் ஒரு மாற்றம் வேண்டும்மென்று காக்கை நகையை தூக்கி சென்றுயுள்ளது இது கதை அல்ல உண்மையில் நடந்த நிகழ்வு.

குமரி மாவட்டத்தில் 5 பவும் தங்க நகை பொட்டலத்தை தூக்கிச் சென்ற காகத்தை 200 மீட்டர் வரை துரத்திச் சென்று நகையை மீட்டன்ர்.

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவெ தமிழ் ராணி. அவர் தனது உறவினர் ஒருவருக்கு கொடுக்க 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகைகளை ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலம் கட்டினார் தமிழ்ராணி மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கச் சென்றார். அவர் கையோடு அந்த நமை பொட்டலத்தையும் எடுத்துச் சென்று மாடி சுவற்றில் மேல் வைத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த காகம் நகை பொட்டலத்தை உணவு பொட்டலம் என்று நினைத்து தூக்கிச் சென்றது.

இதை பார்த்த அவர் கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு ஒடிவந்தவர்கள் காகத்தை துரத்தி சுமார் 200 மீட்டர் வரை பறந்த காகம் ஒரு ஒட்டு வீட்டுக் கூரையில் அமர்ந்தது உடனே துரத்திச் சென்றவர்கள் கையில் கிடைத்தவற்றால் காகத்தை விரட்டினா. இதைப் பார்த்த அந்த காகம் பொட்டலத்தை போட்டுவிட்டு இடத்தை காலி செய்தது அவர்கள் பொட்டலத்தை எடுத்து தமிழ்ராணியிடம் கொடுத்தனர்.

நகையை சுட்ட காகம் உங்கள் பார்வைக்கு

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.