Latest News

பிரபாகரன் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆதாரத்தை வெளியிடுகிறது சேனல் 4!




தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' எனும் ஆவணப்படத்தை தயாரித்துள்ள சேனல் 4, வருகிற 14ஆம் தேதி இரவு அதனை வெளியிடுகிறது. ஈழத்தில் நடந்துள்ள போர்க்குற்றங்களின் உண்மையான ஆதாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படம் பல அதிர்வலைகளை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது. 

இந்த ஆவணப்படத்தில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் (வயது 12) ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சி வருகிறது. பாலச்சந்திரனும் அவருடன் இருந்த மெய்க்காப்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான முழு ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறுகிறது சேனல் 4 நிர்வாகம்!


""பாலச்சந்திரன் நெஞ்சில் 5 தடவைகள் சுட்டிருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார் சேனல் 4க்கு கிடைத்த ஆதாரங்களை ஆராயந்து ஆய்வு அறிக்கை சமர்பித்துள்ள பேராசிரியர் டெரிக் பவுண்டர்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.