Latest News

  

கடன் பயங்கரவாதமும் குட்டி போடும் கூட்டு வட்டியும்!


ஆயுதாங்கிய காவலர்கள்,ரகசிய தொலைக்காட்சி காமிராக்கள்,இரண்டு அடுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள்,மெடல் டிடெக்டர்கள் எல்லாவற்றையும் மீறி கழிப்பறை வழியாக மூன்று மூகமுடி அணிந்த நபர்கள் தூதரக அதிகாரியைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

சரியாக அதே நேரத்தில் தூதரக அலுவலக வாயிலிலும் துப்பக்கிச் சண்டை..!

இரண்டே நிமிடங்களில் முழு அலுவலகமே மூகமுடி மனிதர்களின் கையில்...!

தூதரக அதிகாரி,அவரின் மனைவி,துணை அதிகாரி,பி.ஆர்.ஒ.என அறுவரை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

சில கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் பணயக் கைதிகளை ஒரு நாளுக்கு ஒருவர் என்கிற ரீதியில் கொன்று விடுவோம் அல்லது முழு கட்டடத்தையே தரைமட்டமாக்கி விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

காட்சி : 2
இடம் : ஒரு ஏழை நாட்டின் விமான நிலையம்


நீலவானில் வட்டமிட்டபடி வந்து தரையிறங்குகிறது சிறப்பு போயிங் 737 விமானம் பளபளவென மின்னும் கருப்பு கோட்,கருப்பு கண்ணாடி,கருப்பு டை,கருப்பு ஷூவுடன் மூன்று மிடுக்கான அதிகாரிகள் விமானத்திலிருந்து இறங்குகின்றார்கள்.

நிதி அமைச்சக அதிகாரிகள் கும்பிடு போடாத குறையாக,மிகுந்த பணிவுடனும் அடக்கவொடுக்கத்துடனும் அவர்களை பளபள மகிழுந்துகளில் அழைத்துச் செல்கிறார்கள்.

வறட்சி,ஊழல்,நிர்வாகச் சீர்கேடு,பங்குச்சந்ததை வீழ்ச்சி,அந்நிய செலாவணிப் பற்றாக்குறை,தேசிய உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சி என எல்லாமாகச் சேர்ந்து ஒட்டுமொத்த தேசப் பொருளாதார நிலை தத்தளித்துக் கொண்டிருந்தது....

பசி பட்டினிச்சாவு, பஞ்சம் என மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்- குளுகுளு அறையில் கூடிய மிடுக்கான அதிகாரிகள்- ஐ.எம்.எப்-உலக வங்கியின் மூத்த அதிகாரிகள் எனச் சொல்லவும் வேண்டுமா- நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் 50 பில்லியன் டாலர் கடன் தரத்தயார் என அறிவிக்கிறார்கள்.அதே மூச்சில் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிடத் தொடங்குகிறார்கள்.

என்ன நடக்கும்?


முதல் காட்சி எப்படி முடியும்? மூகமுடி மனிதர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அதிரடிப் படையினாரல் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

பயங்கர தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகத்தில் பரபரப்பாக செய்தி வெளியாகும்.

இரண்டாவது காட்சி...? ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சேவைக்காக மிடுக்கான அதிகாரிகளுக்குப் பெரும் பரிசு தரப்படுகிறது.

கடன் பொறியில் சிக்கிய நாட்டின் வருமானம் முழுமையாக முடக்கப்படுகின்றது. அதன் வருவாய் ஈட்டும் திறனும் மடக்கப் படுகின்றது.

கடன் கொடுத்த நிறுவனங்களோ 50 பில்லியன் டாலரை விட பல மடங்குத் தொகையை அடுத்த பத்தாண்டுகளில் ஈட்டிவிடுவர். கடனை அறிவித்த அதிகாரிகளோ போனஸ்,பதவி உயர்வு என செழிப்பார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் ஏழை நாடுகளின் மீது இத்தகைய ‘பொருளாதார வளர்ச்சியை’- கொழுத்த முதலாளிகளுக்கும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கும் வளர்ச்சியை- திணித்திருக்கிறார்கள்.

இந்த ‘வளர்ச்சி’மேற்குலக்குக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளையோ அடிமையாக்கி விடும்.

இந்த வகையில் இந்தப் பன்னாட்டு கடன் முதலைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை தங்களின் கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
கடன்கள், பன்னாட்டு நிதியுதவி,கடன் நிவாரணம்- எல்லாமே எப்போது வழங்கப்படும்? ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் முன்வைக்கும் நிபந்தனைகளையும் விதிகளையும் அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே இவையேல்லாமே கிடைக்கும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை நிறுவப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? பொருளாதார சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் உள்நாட்டு வணிகத்தைத் திறந்து விடுங்கள்; சந்தையை தாரளமயமாக்குங்கள்; அடிப்படையான இயற்கை வளங்களையும், முக்கியமான, இன்றியமையாத துரைகளையும், சேவைகளையும் தனியார்மயமாக்குங்கள் என்று நிபந்தனை விதிக்கப்படும்.

கழுத்தை நெரிக்கும் வட்டி விகிதம் தாறுமாறாக எகிறும் போது உடல்நலம், மருத்துவம்,கல்வி, போக்குவரத்துவசதி,சாலைவசதி போன்ற சேவைத்துறைகள் மீதுதான் கை வைக்கப்படும்.

இந்த துறைகளுக்கு அரசு மானியங்களும், முதலீடுகளும், நிதியுதவிகளும், சலுகைகளும் நிறுத்தப்படும்.இது கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

அதே சமயம் இந்த நாடுகளை ‘பொருளாதார நெருக்கடியிலிருந்து’ காப்பாற்றிய வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த லாபம் சம்பாதிக்கும்.

மனிதனால் உருவாக்கப்படுகிற பெரும் துயரங்களான போர்கள் மூளும்போது கூட முதலீடு செய்வதற்கான பணம் வைத்திருப்பவர்களின் காட்டில் மழைதான்...! பணம் பண்ணுகின்ற அருமையான வாய்ப்புகளாக போர்கள் ஆக்கப்பட்டுவிட்டன.
பத்தாண்டுகளுக்கு முன்பே முதுபேரும் பொருளாதார வல்லுநர் ஜே.டபிள்யூ.ஸ்மித் எச்சரித்தார்: “ஒரு சமூகத்தின் உபரி உற்பத்தி முழுவதையும் விழுங்கிக் கொள்கின்ற வகையில் கடன் பொறியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் கூட்டுவட்டி பெருமளவுக்கு வளர்வதைத் தடுக்காமல் விட்டுவிட்டோமெனில் கடன் பொறியை யாதொன்றாலும் கட்டுப்படுத்தவும் முடியாது: அதனை நிர்வகிக்கவும் முடியாது.மிகப்பெரும் கொடுமையாக பேருவம் எடுத்துவிடும்; எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

ஆண்டுக்கு 20 சதவீதம் என்கிற கணக்கில் கூட்டுவட்டி குட்டி போட்டுக் கொண்டே போகிறது.1973-இல் 100 பில்லியன் டாலராக இருந்த மூன்றாம் உலகக் கடன் 1993-இல் 1.5 டிரில்லியனாக ஊதிப்பெருகி விட்டது. (1.5 டிரில்லியன் டாலரில் 400 மில்லியன் டாலர்தான் கடனாக வழங்கப்பட்ட தொகை.மற்றதெல்ல்லாம் கூட்டு வட்டி...!) மூன்றாம் உலகக் கடன் நிலை இதே போல ஆண்டுக்கு 20 சதவீதம் கூட்டு வட்டியாக வளர்வது நீடித்தால் அது பதினெட்டு ஆண்டுகளுக்குள் 117 டிரில்லியன் ஆகிவிடும்; 34 ஆண்டுகளில் 13.78 குவாட்ரில்லியன் ஆகிவிடும்.”

ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடிக்குச் சமம்...! அம்மாடி....! மலைக்க வைக்கிறதா? அதைவிட திகைப்படையச் செய்கிற,இரத்தத்தை உறைய வைக்கக் கூடிய இன்னொரு உண்மையும் உண்டு.

இந்தக் கடன் பொறி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உபரி உற்பத்தி அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பதுதான் அது. கடன்பொறி ஒரு நாட்டின் உழைப்பை மட்டும் உறிஞ்சுவதில்லை.அதன் இரத்தத்தையே உறிஞ்சி சக்கையாகப் பிழிந்து விடுகிறது.
கடன் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் இத்தகைய பயங்கரவாதம் குழந்தைகளின் எதிர்காலத்தை அபகரிக்கிறது; நோயாளிகளைக் கை விடுகிறது; உழைப்பாளிகளை அடிமைகளாக்குகிறது.இதுதான் கடன் பயங்கரவாதம்...!

உலக வங்கிக் கடனால் உருவான வறுமை காரணமாக ஒரு நாளுக்கு 24 பிலிப்பைன்ஸ் குழ்ந்தைகள் செத்து மடிகிறார்கள்.

உணவோ மருந்தோ வாங்க சக்தியின்றி, பணம் இன்றி மூன்றாம் உலக நாடுகளில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் செத்து மடிகிறார்கள்.அந்த குருத்துகளின் பெற்றோரால் நாள் முழுக்க இருபது மணிநேரம் உழைத்தாலும் ஒரு நாளுக்கு 2 டாலரை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியாது.

நாற்றமடிக்கும் சாக்கடைகளும், தேங்கி நிற்கும் குட்டைகளுமாக வாழ்வதற்கே தகுதியில்லாத சேரிகள் இன்று மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே பல்கிப் பெருகி விட்டன.

டிஸ்கி  வங்கியில் கொள்ளையிட்டவர்களை என்கவுண்டர் செய்தவர்கள் மக்களை வட்டியின் மூலம் கொல்லுகின்ற வங்கிகளின் கொள்ளை அதிகாரிகளை யார் கொல்வது.

பின்குறிப்பு: இதன் தொடர் (இறைநாடினால்)கடன் பயங்கர வாதம் தீர்வு என்ன? தொடரும்.

References:டாக்டர் மன்சூர் துர்ரானி
பேராசிரியர். மலிக் முஹம்மத் ஹுஸைன்
நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.