நன்றி ! நன்றி ! நன்றி அதிரை பொது மக்களின் நலனில் அக்கரை கொண்டு மிக துடிப்புடன் செயல்பட்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மற்றும் பேரூராட்சி தலைவர், துனைத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிரை TIYA வின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பனி மென்மேலும் சிறப்பாக செயல்பட எங்கள் நல்வாழ்த்துக்கள்
நமதூரில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்பட்டு வருகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என பேரூராட்சியின் அறிவிப்பை அடுத்து, ஒரு சில தெருக்களுக்கு குடிநீர் செல்வதில் சிரமங்கள் இருந்தது. மேலும் பொதுமக்கள்கள் படுகின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வாடகைக்கு “ஜெனரேட்டர்” களை வைத்து பம்பு மோட்டார்களை இயக்குவது என முடிவு செய்து அதன் பிரகாரம் இயக்கி வருகின்றது.
இதனால் ஏற்படுகிற கூடுதல் செலவினங்களைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனே முக்கியம் என கருதி துரித நடவடிக்கை எடுத்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவர்களுக்கும் அதிரை வலைதள சகோதரர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் நல்ல பல ஆலோசனைகளுடன் கூடிய கருத்துகளைப் பதிந்த வலைதள நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் போன்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment