கொலையானவர் என்று கூறப்பட்டவர் உயிருடன் திரும்பி வந்த வழக்கில் விசாரணை நடத்த செசன்ஸ் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அப்பாவிகள் 3 பேர் 11 ஆண்டு சிறை அனுபவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள மவுரானிப்பூரைச் சேர்ந்தவர் ரத்னாகர்தாஸ். இவரது மகன் பகவான்தாஸ்.
இதே ஊரைச் சேர்ந்தவர்கள் மோகன், இவரது மகன் ராமேஷ்வர், மைத்துனர் தால்சந்த். இவர்களுக்கு சொந்தமாக வளமான நிலங்கள் இருந்தன. இந்த நிலங்களை கைப்பற்ற அதே ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் திட்டமிட்டார். இதற்கான சதியில் அவர் இறங்கினார். இந்த சமயத்தில் பகவான் தாஸ் வேலை தேடி ராஜஸ்தான் மாநிலம் சென்று விட்டார்.
அவர் ஊருக்கு திரும்பி வர பல வருடங்கள் ஆகும் என்பதை ஊர் முக்கிய புள்ளி அறிந்தார். இதையடுத்து, தனது சதியை அரங்கேற்ற தொடங்கினார். ஊரின் ஒதுக்குப்புறமாக கொலை செய்யப்பட்டு கிடந்த அடையாளம் தெரியாத ஒருவரை, உள்ளூர் போலீசார் மூலம் அது பகவான்தாஸ் என்று சித்தரிக்கச் செய்தார்.
அவரை கொலை செய்தது ராமேஷ்வர்தாஸ், மோகன், தால்சந்த் ஆகியோர்தான் என்றும் வழக்கு பதிவு செய்ய வைத்தார். 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜான்சி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. அங்கு அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின் போது, வெளிப்படையான ஆதாரங்கள் பலவற்றை அவர்கள் தாக்கல் செய்தும், பலனில்லாமல் போனது.
கடந்த 2000-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, ராமேஷ்வர் “மைனர்” என்பதால், ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று வாதிடப்பட்டது. அதை கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. உத்தரபிரதேச ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
அங்கும் அவர்களது ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பகவான்தாஸ் ஊருக்கு திரும்பி வந்தார். கொலை செய்யப்பட்டவர் என்று சொல்லப்படடவர் உயிருடன் திரும்பி வந்ததால், ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தனர். பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜான்சி நீதி மன்றத்திலும், உத்தரபிரதேச மாநில அரசிடமும் முறையிடப்பட்டது. அவர்களின் முறையீட்டு மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. எனவே, அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். அவர்களின் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். கோகலே ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை முறையை ஆராய்ந்த நீதிபதிகள், ஜான்சி கோர்ட்டில் பல தவறுகள் நடந்திருப்பதை அறிந்தனர். போதிய ஆதாரங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும், அதை ஜான்சி செசன்ஸ் கோர்ட்டு கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்துமாறும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் ஜான்சி செசன்ஸ் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்
இதே ஊரைச் சேர்ந்தவர்கள் மோகன், இவரது மகன் ராமேஷ்வர், மைத்துனர் தால்சந்த். இவர்களுக்கு சொந்தமாக வளமான நிலங்கள் இருந்தன. இந்த நிலங்களை கைப்பற்ற அதே ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் திட்டமிட்டார். இதற்கான சதியில் அவர் இறங்கினார். இந்த சமயத்தில் பகவான் தாஸ் வேலை தேடி ராஜஸ்தான் மாநிலம் சென்று விட்டார்.
அவர் ஊருக்கு திரும்பி வர பல வருடங்கள் ஆகும் என்பதை ஊர் முக்கிய புள்ளி அறிந்தார். இதையடுத்து, தனது சதியை அரங்கேற்ற தொடங்கினார். ஊரின் ஒதுக்குப்புறமாக கொலை செய்யப்பட்டு கிடந்த அடையாளம் தெரியாத ஒருவரை, உள்ளூர் போலீசார் மூலம் அது பகவான்தாஸ் என்று சித்தரிக்கச் செய்தார்.
அவரை கொலை செய்தது ராமேஷ்வர்தாஸ், மோகன், தால்சந்த் ஆகியோர்தான் என்றும் வழக்கு பதிவு செய்ய வைத்தார். 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜான்சி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. அங்கு அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின் போது, வெளிப்படையான ஆதாரங்கள் பலவற்றை அவர்கள் தாக்கல் செய்தும், பலனில்லாமல் போனது.
கடந்த 2000-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, ராமேஷ்வர் “மைனர்” என்பதால், ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று வாதிடப்பட்டது. அதை கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. உத்தரபிரதேச ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
அங்கும் அவர்களது ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பகவான்தாஸ் ஊருக்கு திரும்பி வந்தார். கொலை செய்யப்பட்டவர் என்று சொல்லப்படடவர் உயிருடன் திரும்பி வந்ததால், ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தனர். பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜான்சி நீதி மன்றத்திலும், உத்தரபிரதேச மாநில அரசிடமும் முறையிடப்பட்டது. அவர்களின் முறையீட்டு மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. எனவே, அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். அவர்களின் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். கோகலே ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை முறையை ஆராய்ந்த நீதிபதிகள், ஜான்சி கோர்ட்டில் பல தவறுகள் நடந்திருப்பதை அறிந்தனர். போதிய ஆதாரங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும், அதை ஜான்சி செசன்ஸ் கோர்ட்டு கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்துமாறும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் ஜான்சி செசன்ஸ் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்

No comments:
Post a Comment