Latest News

  

மின்கட்டணம் செலுத்தும் வசதி மேலும் பல மாவடங்களுக்கு விரிவாக்கம்

அஞ்சல் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் குறிப்பிட்ட 50  அஞ்சலகங்களில் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை முதல் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் அஞ்சலகங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணமாக ரூ.5  கூடுதலாக வசூலிக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும், அஞ்சல் துறைக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.