ஒவ்வொரு கால சூழ்நிலையிலும் ஏதாவது ஒருவகை நோய் வந்து நம் மக்களை அவதிக்குள்ளாக்கும், அந்த வகையில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் நமதூர் மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது.
உடலை நிலைகுலைய செய்யும் அதிக காய்ச்சல், தலை சுற்றல், மயக்கம், வாந்தி, பசியின்மை இவை இக்க்காயச்சலின் அறிகுறிகளாக கூறப்படுகின்றது.
சாதாரண காய்ச்சல்தானோ என சரியான மருத்துவ சிகிச்சை செய்யாவிடில், இவ்வகை காய்ச்சல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்...
சிக்குன்குன்யா, மலேரியா இன்னும் பல கொடிய நோய்களுக்கு முக்கிய காரணம் கொசுக்கள் என்பது உலகறிந்த உண்மை அதேபோல் இந்த டொங்கு காய்ச்சலுக்கும் கொசுக்களே முக்கிய காரணம், தேங்கி நிற்கும் தண்ணீரில் உருவாகும் இந்த கொசுக்களால் இக்காய்ச்சல் பரவுகின்றது.
கொசுக்களை அழிக்க நமதூர் பேரூராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெறும் மருந்து அடிப்பதால் மட்டும் கொசுக்களை அழித்துவிட முடியாது. நமதூரில் நீண்ட நாட்களாக கேட்பாடற்று கிடக்கும் அசுத்தமான குளங்கள், நீர்நிலைகள், சாக்கடைகள், இவற்றை சரிவர சுத்தம் செய்து கொசுக்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.
நடுத்தெரு (மேட்டுத்தெரு) பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள செட்டியாகுளத்தை கொசுக்களின் சரணாலயம் என்றே கூறலாம், சிறு பிள்ளைகள் பயிலும் இந்த பள்ளிக்கு அருகில் உள்ள இந்த குளத்தில் உள்ள கொசுக்களால் இந்த பிள்ளைகளையும் இந்த நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
இவ்வகை காய்ச்சல் வந்தவர்களை கடித்த கொசு மற்றவரை கடித்தல் போதும் உடனே இந்நோய் தொற்றிக்கொள்ளும் எனவே அவசரகால நடவடிக்கையாக நமதூர் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் சொந்த விருப்பு வெறுப்புகள் மற்றும் கட்சி சார்ந்த மனஸ்தாபங்களை களைந்து பேரூராட்சி தலைவரிடம் கலந்தாலோசித்து இது போன்ற குளங்களை, சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை துரிதமாக செய்ய வேண்டும். காலம் தாழ்த்தினால் நம்மையும் இக்காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது.
நமதூர் தன்னார்வ அமைப்புகளும் ஊர் நலனில் அக்கறையுள்ள சகோதரர்களும் முன்னின்று அசுத்தமான குளங்களை சாக்கடைகளை சரிசெய்ய தன்னாலான தக்க முயற்சி எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் டெங்கு காய்ச்சல் கட்டுபடுத்தல் மட்டுமல்ல, எல்லா வகையிலும் சுற்றுப்புற சூழல் ஆரோக்யமாக இருக்கும்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment