Latest News

  

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை யாரும் கேள்வி கேட்பதில்லை.. ஆனால் எங்க கட்சியை மட்டும் கேட்கிறாங்க.. ராகுல் காந்தி

 

பா.ஜ.க., சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் உள்கட்சி ஜனநாயகம் குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை ஆனால் எங்க கட்சியை மட்டும் கேள்வி கேட்கிறாங்க என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசுதோஷ் வர்ஷ்னியுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி கூறியதாவது: சதாம் ஹூசைன் மற்றும் கடாபி ஆகியோர் தேர்தல்கள நடத்தினர். அவர்கள் வெல்வது வழக்கம். அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது போல் இல்லை. ஆனால் அந்த வாக்குகளை பாதுகாக்க நிறுவன கட்டமைப்பும் இல்லை.

பா.ஜ.க.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிப்படையாக விவாதம் நடத்த முடியாது என்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். கட்சிக்குள் ஜனநாயகத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது என்று கூறும் முதல் நபர் நான். ஆனால் இந்த கேள்வி வேறு எந்த அரசியல் கட்சியையும் பற்றி கேட்கப்படவில்லை என்பது எனக்கு சுவாரஸ்யமானது.

பகுஜன் சமாஜ் கட்சி

பா.ஜ.க., சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் ஏன் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் காங்கிரஸை பற்றி கேட்கிறார்கள். ஏனெனில் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாங்கள் ஒரு சித்தாந்த கட்சி, நமது சித்தாந்தம் அரசியலமைப்பின் சித்தாந்தம். எனவே நாம் ஜனநாயகமாக இருப்பது மிகவும் மிகவும் முக்கியமானது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.