Latest News

  

தடுப்பு மருந்து விநியோக வேகம்; அமெரிக்கா, பிரிட்டனை அடுத்து இந்தியா..!

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்துகள் செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நாடு அமெரிக்கா.இதனால் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் வேகம் அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் பிரிட்டன் உள்ளது. மூன்றாவது இடத்தில் எந்த நாடு உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழுந்த நிலையில் தற்போது அதற்கு இந்தியா என்று பதில் வந்துள்ளது.இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புள்ளிவிவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிவரை 57 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இன்று, ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த வேகத்தில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக 8,875 அமர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.இந்த தகவலை இந்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

54 லட்சம் ஊசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. கொரானா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள 12 இந்திய மாகாணங்களில் 2 லட்சம் பேருக்கு ஊசி கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.ஆஸ்ட்ரோ சினேகா தடுப்பு மருந்து சீனாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. மேலும் கோவிஷீல்டு, கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் அதிவிரைவாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 137 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்தை இன்னும் ஆறு மாதத்திற்குள் செலுத்த இந்த சீரான வேகம் தொடர்ந்தாலே போதுமானது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.