
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து, தேர்தலை ஒப்புக்கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், பைடன் அதிபர் என தேர்வாளர் குழு சான்றளித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என நிருபர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வி அடைந்த பின் டிரம்ப் முதன்முறையாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார்.
நிருபரின் இந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், 'வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் நிச்சயம் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் வருகிற ஜனவரி 20ந்தேதி வரை பல்வேறு விசயங்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளன' என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment