Latest News

  

வருவாய் சட்டங்களுக்கான தரணி போர்ட்டல் தசரா அன்று தொடங்கப்படும் ; தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் : தெலுங்கானாவில் வருவாய் சட்டங்களுக்கான தரணி போர்ட்டலை தசரா அன்று முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் புதிய வருவாய் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக பிரகதிபவனில் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வருவாய் சட்டங்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட உள்ள தரணி போர்ட்டல், தசரா அன்று துவக்கி வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போர்ட்டலை துவங்கும் முன் அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிகக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் புதிய வருவாய் சட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் முறையில் நிலபதிவுகள் பதிவு செய்யப்படும். இந்த சட்டங்களால் ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது. இதற்கான தரணி போர்ட்டல், வரும் தசரா பண்டிகை நாளில் துவங்கப்படும். அதற்கு முன் அதிகாரிகள் தரணி போர்ட்டல் குறித்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வலைத்தளம் தொடங்கப்பட்ட உடனேயே, புதிய வருவாய் சட்டத்தின்படி நிலங்கள் மற்றும் பிற சொத்துக்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அரசு மேற்கொள்ளும்.

முன்னதாக பதிவு செய்யப்பட்ட நிலங்களின் பதிவு விபரங்கள் அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு செயல்முறை களையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு கூறினார். மேலும், தரணி போர்ட்டலில் விவசாய மற்றும் வேளாண்மை அல்லாத சொத்துக்களின் ஆன்லைன் பதிவுகளை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பதிவுகளின் வேகத்தை அதிகரிப்பதால் தேவையான மாற்றங்களைச் செய்ய வலைத்தளம் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விரும்பினார். போர்டல் தொடங்கப்படும் வரை எந்த பதிவுகளும் வருவாய் பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.