Latest News

100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

நடப்பு ஆண்டில் முதல்முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் சற்றுமுன் 100 அடியை எட்டியது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 102 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது.

அணை கட்டி முடிக்கப்பட்டு 85 ஆண்டுகளில் 66 வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வரத்து காரணமாக கடந்த 21 ஆம் தேதி காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 99.62 அடியாக உயர்ந்தது.

இன்று காலை அணைக்கு நொடிக்கு 35,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மேட்டூர் அணை வரலாற்றில் 66 வது முறையாகவும், நடப்பு ஆண்டில் முதல் முறையாகவும் அணையின் நீர்மட்டம் இன்று பிற்பகல் 100 அடியை எட்டியுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.