Latest News

  

கல்லூரி கட்டணம் செலுத்த கணவன் பணம் தராததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

புதுச்சேரியில் கல்லூரி கட்டணம் செலுத்த கணவன் பணம் தராததால் திருமணமான 10 மாதத்தில் மனைவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ். இவரது மகள் தேவிகா(வயது 20). இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு தேவிகா வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தேவிகா தனது கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்த தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் பாலமுருகனால் பணம் கொடுக்கமுடியவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த தேவிகா, நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலை எழுந்துபார்த்தபோது தேவிகா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.