
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான் (45). இவர் புதுவயல் சாலையில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டிணத்தில் வசிக்கும் இவரது சகோதரர் சகுபர் அலிக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. அந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பின்னர் இது குடும்ப பிரச்னையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் யூசப்பின் இறைச்சிக் கடைக்குச் சென்ற சகுபர் அலியின் மகன்கள் நியாஸ், ரகுமான் யூசப் ஆகியோர் அவரை அரிவாளால் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த யூசப் அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் தப்பியோட முயற்சித்தார்.

எனினும் அவரை மடக்கி பிடித்த நியாஸ் மற்றும் ரகுமான் அவரது தலையை துண்டாக வெட்டினர். பின்னர் வெட்டிய தலையுடன் சாக்கோட்டை காவல் நிலையம் சென்ற கொலையாளிகள் தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.
இருவரையும் கைது செய்த சாக்கோட்டை போலீஸார், யூசுப் ரகுமானின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in
No comments:
Post a Comment