Latest News

  

கொரோனா பாதிப்பு எதிரொலி; ஏரி, கால்வாயில் ஊற்றப்படும் பால்: கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

ஆலந்தூர்: கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் பால் வாங்காததால் வீணாகும் பாலை ஏரி, குளங்களில் ஊற்றி வருகின்றனர். இதனால் வருமானமின்றி தவிக்கும் வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சென்னை நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மூவரசன்பட்டு பகுதிகளில் ஏராளமான பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கறக்கப்படும் பால் வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள டீ கடை, ஓட்டல்கள், பேக்கரி மற்றும் குளிர்பான கடைகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பசு மாட்டு பாலை வாங்க கடைக்காரர்கள் முன்வரவில்லை. வீட்டில் இருப்பவர்களும் பால் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டனர். இதனால், தினந்தோறும் மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதன்காரணமாக தேங்கிய பாலை அப்பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் ஏரி, குட்டைகளில் ஊற்றுகின்றனர். இதுகுறித்து உள்ளகரம் பகுதி பால் வியாபாரி நரசிம்மன் கூறுகையில், 'கறவை மாடுகளை நம்பிதான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் கடைகள் மூடப்பட்டதால் மாட்டு பால் வாங்குவதை நிறுத்திவிட்டனர். தினந்தோறும் கறக்கப்படும் பாலை கால்வாயில் ஊற்றுகிறோம். பாலை கறக்காவிட்டால் மாடுகளுக்கும் ஆபத்து என்பதால் தினமும் கறக்கிறோம்.

மீன்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கால்வாயிலும் பாலை ஊற்றுவதில்லை. கடைகள் இல்லாததால் மாட்டு தீவனமும் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கும் கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.