Latest News

இந்திய மக்கள் கொரோனாவின் தாக்கத்தை உணரவில்லை : சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்று திரும்பிய மாணவி வேதனை!

திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்- பரிபூரண தேவி தம்பதியின் மகள் நிருபமா. இவர் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் என்னும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். நிருபமா தங்கியிருந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்த வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியதால், இவர்கள் அனைவரும் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
பின்னர் கடும் சிரமத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நிருபமா தமிழகம் வந்துள்ளார். இப்போது அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய நிருபமா, வூகானில் இருந்து 3000 கி.மீ தள்ளியிருந்தும் எங்களை கல்லூரி நிர்வாகம் பத்திரமாக வேறு இடத்தில் தங்க வைத்திருந்தது. அதன் பின்னர் நான் கடந்த மாதம் தமிழகம் வந்தேன். இந்தியாவில் இருக்கும் மக்கள் கொரோனாவின் தாக்கத்தை உணராமல் இருப்பதாக தோன்றுகிறது.

மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் மருத்துவம் படிக்கிறேன். சீனாவில் கொரோனா தாக்கம் முடிந்த பிறகு மீண்டும் அங்கு சென்று படிப்பை தொடருவேன் என்றும் தற்போது வீட்டிலேயே 5 மணி நேரம் ஆன்லைன் மூலம் படித்து வருவதாகவும் கூறியுள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.