
நாகை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக
தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட
வனஅலுவலர் கலாநிதிக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனசரகர் அயூப்கான்
தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் நாகை அக்கரைபேட்டை பகுதியில் நேற்று
திடீரென ஆய்வு நடத்தினர். இதில் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே 1
டன் எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய
வந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45), நாகை கடற்கரை சாலையை சேர்ந்த செண்பகம்(60) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து நடத்திய சோதனையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியிலும் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு வனத்துறையினர் சோதனை நடத்திய போது முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதப்படுத்தாமல் 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகையில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45), நாகை கடற்கரை சாலையை சேர்ந்த செண்பகம்(60) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து நடத்திய சோதனையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியிலும் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு வனத்துறையினர் சோதனை நடத்திய போது முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதப்படுத்தாமல் 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகையில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும்.
No comments:
Post a Comment