Latest News

மோடியும், அமித்ஷாவும் எப்போதும் உதவ முடியாது: ஆர்எஸ்எஸ்

புதுடில்லி : சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் எப்போதும் உதவ முடியாது என ஆர்எஸ்எஸ்.,ன் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இம்மாதம் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக ஆம்ஆத்மி கட்சியிடம் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. குறித்து ஆர்எஸ்எஸ் சார்பில் பகுத்தாய்வு செய்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2015 ம் ஆண்டிற்கு பிறகு அடிமட்டத்தில் இருந்து கட்சியை கட்டமைக்க பா.ஜ., தவறி விட்டது. கடைசி நிமிடத்திலேயே பா.ஜ., தனது பிரசாரத்தை துவக்கியது. இவை இரண்டும் தான் பா.ஜ.,வின் தோல்விக்கு காரணம். சட்டசபை தேர்தல் அளவில் கூட மோடி மற்றும் அமித்ஷாவால் எப்போதும் உதவ முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.உள்ளூர் மக்களிடம் தெளிவாக தங்களை பற்றி எடுத்துரைத்து டில்லியில் அடிமட்டத்தில் இருந்து கட்சியை கட்டமைக்க வேண்டும். முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் என பலரும் பிரசாரம் செய்தும், கெஜ்ரிவாலுக்கு நேரடி போட்டி என எதையும் குறிப்பிட்டு கூற தவறி விட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் சிலர் மற்ற கட்சியினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதே பா.ஜ.,வின் தோல்விக்கு காரணம் என பரவலாக பேச்சு அடிபடும் நிலையில் ஆர்எஸ்எஸ் இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.