- அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜொலித்த முரட்டுக்காளை
- காளையர்களை கிரங்கடித்து மிரட்டி அசத்தல்..சிறந்த காளையாகவும் தேர்வுச் செய்யப்பட்டது.
தமிழர்
திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ்
நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான
ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை
4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் சிறந்த
மாடுபிடி வீரராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன்
சீறிப்பாய்ந்து வந்த14 காளைகளை அடக்கி அனைவரையும் பிரம்மிக்க
வைத்தார்.இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர் விஜய்க்கு இருசக்கர மோட்டார்
வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
மேலும்
ஜல்லிக்கட்டில் யாரையும் தன் அருகே நெருங்கவே விடாமல், திமிலை திமிராக
காட்டி களத்தில் நெடுநேரமாக கெத்தாக நின்று காட்டி அனைவரின் பாரட்டை
பெற்றபுதுக்கோட்டை சேர்ந்த அனுராதாவின் முரட்டுக் காளை.இந்நிலையில்
அவனியாபுரத்தில் காளையர்களை கதிகலங்க வைத்து களத்தில்மிரட்டிய இந்த காளை
தான் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment