Latest News

குரூப்-1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020- ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத்தேர்வுக்கு ஜனவரி 20- ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.