Latest News

  

காமராஜர் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை: மதுரை - கொல்லம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை போட்டதாக கூறி ஒருதரப்பு சமுதாய மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை போட்டதாக கூறி ஒரு தரப்பு சமுதாய மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலையின் கீழ்புறம் தரையில் அமர்ந்து மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி நகர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அவமரியாதை செய்த மர்மநபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் 300 க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்.
அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கோமிராக்களை ஆராய்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நகர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.