Latest News

செடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை!


செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.

மழைக்காலத்தில், செடியன் குளத்துக்கு வரும் நீரை முழுமையாக தேக்கினால், குளக்கரை உடைந்து விடும் சூழல் ஏற்பட்டதால், பருவமழை பெய்வதற்கு முன்னதாக, பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், செடியன் குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தி இருந்தனர். மேலும், மழையின் போது குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அவ்வப்போது பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதிராம்பட்டினத்தில் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவாகியது. இதனால், குளத்திற்கு மழை நீர் மளமளவென வரத் தொடங்கியது. இருந்தபோதிலும், குளம் முழுமையாக நிரம்பவில்லை. குளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நீர் நிரம்பி இருந்தது.

இந்நிலையில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில்,  மகிழங்கோட்டை பெத்தையன் குளம் ~ செடியன் குளம் வால்வீச்சு வரையிலான ஆற்றுநீர் வழித்தட பாதையை ஜெசிபி இயந்திரத்தின் உதவியோடு தூர் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர்நிலை ஆர்வலர்கள் ஆகியோர் கல்லணை கால்வாயிலிருந்து வரும் ஆற்று நீரை ராஜாமடம் தாய் வாய்க்கால் மூலம், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் வழியாக கொண்டு வந்து குளத்தில் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்பணிக்காக, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 2 பேர் உதவியுடன், 10 க்கும் மேற்பட்ட தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க களப்பணியாளர்கள் ஆற்று நீர் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பு, உடைப்புகளை கண்காணித்து சீர் செய்தனர். வழித்தடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றினர். இதையடுத்து, செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.
  
 
  
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.