Latest News

  

பேனர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! - திருச்சி கலெக்டரிடம் மனு

பொதுமக்களுக்கு இடையூறின்றி பிளக்ஸ்சாரம் கட்டும் தொழில் நடத்திடவும், வாழ்வாதாரத்தை காத்திட வலியுறுத்தி பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சென்னையில் அனுமதியின்றி, இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே ஆளுங்கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் பொறியாளரான சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து, தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிளக்ஸ் உரிமையாளர்மீது மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், பேனர் கலாச்சாரத்தை தடுக்கும்வகையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பேனர் வைக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிமறுக்கப்பட்டதால் பிளக்ஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பிவாழும் பேனர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடையூறின்றி பிளக்ஸ் சாரம் வைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக இத்தொழிலையே முடக்குவது நியாயமல்லை, இவர்களது தொழில் முடங்கி தெருவிற்கு வந்துள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், எனவே இதனை வரைமுறை செய்ய வேண்டும், அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.