Latest News

  

தாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை !

ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரம் காட்டு கொட்டாயில் வசித்து வருபவர்கள் சாமுவேல்-சின்னப்பொன்னு தம்பதியினர். கூலித்தொழிலாளியான இவர்களுக்கு அருள்ஜோதி (21) மற்றும் ராஜலட்சுமி (14) ஆகிய மகள்கள் இருந்தனர். அருள்ஜோதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மகள் ராஜலட்சுமி அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னப்பொன்னு நேற்று இரவு தனது மகள் ராஜலட்சுமியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில்அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சின்னப் பொன்னுவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கினார். பின் அவர் கண் எதிரிலேயே அவரது மகள் ராஜலட்சுமியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட ராஜலட்சுமியின் தலையை நடுரோட்டில் வைத்துவிட்டு, தினேஷ்குமார் தப்பிக்க முயன்றார். அப்போது தினேஷ்குமாரின் மனைவி சாரதா மற்றும் அவரது தம்பி ஆகியோர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த ஆத்தூர் காவல்துறையினர், தலை வேறு உடல் வேறாக இருந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தினேஷ்குமார் ஏன்? எதற்காக? சிறுமியை கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சேகத்தில் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.