Latest News

  

போலீஸ் தேர்வு... ஒரே அறையில் ஆண்கள், பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை... சர்ச்சை

ஒரே அறையில்... ஒரே அறையில் மருத்துவ பரிசோதனையா என்று பெண்கள் வேதனைப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் போலீஸ் தேர்வின் போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,யில், போலீஸ் பணிக்கான தேர்வு நடந்து வருகிறது. பிஹிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் போலீஸ் வேலைக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, 217 ஆண்கள் மற்றும் பெண்கள் வந்திருந்தனர்.
இரு தரப்பினருக்கும், ஒரே அறையில் வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

உள்ளாடை மட்டும் அணிந்த ஆண்கள், வெற்றுடம்புடன் அங்கே வரிசையில் நின்றது, பெண்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
பெண்களை சோதனை செய்ய, பெண் டாக்டரோ, செவிலியரோ நியமிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.