
கோவை மாவட்டம் வால்பாறை
மலைப்பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன.
இந்தத் தோட்டங்களில் லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர் வேலை
பார்க்கின்றனர். தேயிலைத்தோட்டங்களின் நடுவில்
யானைக்கூட்டங்களால்
உணவுப்பொருள்கள்தான் சேதமாகிறது, உயிர்சேதம் எதுவும் ஏற்படுவதில்லை.
ஆனால், சமீபகாலமாக வால்பாறை மக்கள் அஞ்சி நடுங்குவது யானைகளுக்காக அல்ல.
ஆட்கொல்லி சிறுத்தைகளுக்காக, அதுவும் குறிப்பாகக் குழந்தைகளை குறிவைத்து
தாக்கிவிட்டு காட்டுக்குள் இழுத்துச் சென்று ரத்தம் குடிக்கும்
சிறுத்தைப்புலிகளைக் கண்டு வால்பாறையே உறக்கமில்லாமல் தவிக்கிறது.
கடந்த
ஆண்டில் மட்டும் நான்கு சிறுவர்கள் சிறுத்தையால் கொல்லப்பட்டுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி அன்று தேயிலைத்தோட்ட தொழிலாளி
ஜெயக்குமார் என்பவரின் நான்கு வயது ஆண் குழந்தை ஜான்டோரினோ. தேயிலைத்
தோட்டத்தையொட்டியுள்ள தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர்
என்று தேயிலைத்தோட்டத்திலிருந்து பாய்ந்து வந்தது சிறுத்தை ஒன்று.
ஜான்டோரினோ மீது பாய்ந்து தாக்கி கழுத்தைப் பிடித்து தரதரவென்று அருகிலுள்ள
காட்டுக்குள் இழுத்துச்சென்று, குரல்வளையைக் கடித்து துண்டாக்கி ரத்தம்
குடித்துள்ளது.
அதேபோல்,கடந்த பிப்ரவரி 8-ந்தேதி அன்று வால்பாறை
நடுமலை எஸ்டேட் பகுதியில் நடந்துவந்துகொண்டிருந்த சிறுவன் சைதுல் இஸ்லாம்
பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளான்.
சிறுத்தைகள்,
குழந்தைகளைக் கொல்வதும், வனத்துறையினர் அதைக் கூண்டுவைத்து பிடித்து
மறுபடியும் காட்டுக்குள் கொண்டுபோய் விடுவதும் தொடர்கதையாகிவிட்டது.
காலம்
காலமாகக் காட்டுக்குள் வேட்டையாடி உணவு தேடிய சிறுத்தை ஊருக்குள் புகுந்து
குழந்தைகளைத் தாக்குவதற்கான காரணம் என்ன என்பதை நாம் கேட்ட நபர்
சூழலியலாளர் கோவை சதாசிவம் '' உணவு தேடித்தான் அவை ஊருக்குள் வருகின்றன.
குழந்தைகளின் உருவம் பதுங்கியிருக்கும் சிறுத்தையின் பார்வையில்
சிறுவிலங்குபோல தெரிவதால், ஏதோ ஒரு விலங்கு என்று குழந்தைகள்மீது
பாய்கிறது. மேலும், நாய்கள் என்றால் சிறுத்தைகளுக்கு மிகவும் இஷ்டம்.
குடியிருப்புப் பகுதிகளில் இப்போது பலரும் நாய் வளர்க்கிறார்கள் அதை
அடித்துச் சாப்பிடவும் , பிராய்லர் கோழிகளின் இறைச்சிக் கழிவுகளை வீதிகளில்
கொட்டுவதால் அதைச் சாப்பிட்டு பழகிய சிறுத்தைகளை அந்த இறைச்சி வாடை
வரவைக்கிறது.
No comments:
Post a Comment