
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் இன்று இலங்கைக்
கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது 2 படகுகளும்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்சியாகச் சிறைபிடித்து செல்வதுடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் குறைவான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன.
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்சியாகச் சிறைபிடித்து செல்வதுடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் குறைவான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன.
இவர்கள்
நேற்று இரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில்
மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின்
படகுகளைத் தங்கள் கப்பலால் மோதி சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், கடலில் பாய்ச்சியிருந்த வலைகளையும் மீன்பிடி சாதனங்களையும்
சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்ப
முயன்றனர். இந்நிலையில் அருளானந்தம் மற்றும் கென்னடி ஆகியோருக்கு சொந்தமான
2 விசைப்படகுகளைச் சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர் அதில் இருந்த மேதல்,
வில்பர்ட், வினோ, ஜான்போஸ், சேகர், சச்சின், மலைச்சாமி, ராஜாராம், இன்னாசி
உள்ளிட்ட 13 பேர்களையும் சிறைபிடித்துச் சென்றனர். இவர்களிடம் விசாரணை
நடத்திய இலங்கைக் கடற்படையினர் விசாரணைக்குப் பின் ஊர்க்காவல்துறைப்
போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 13 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 13 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment