கொலை செய்யப்பட்ட தாயார் சரளா, கொலையாளி மகன் ஜஷ்வந்த்
சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் பெற்று வீட்டிலிருந்த
தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தனது தாயையும் அடித்துக் கொன்றார். பின்னர்
நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது
செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல்
ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில்
கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால்
நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து
வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த
சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில்
பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம்
இருந்தது. வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருந்தது. மகன் தஷ்வந்தும்
தலைமறைவாகியிருந்தார். இதனால், தஷ்வந்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக
வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தது.
தஷ்வந்தை பிடிக்க
போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின்
செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது
நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஷ்வந்த் மும்பையில்
பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை
விரைந்த போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர்.
தஷ்வந்த் கைது
செய்யப்பட்டதை சென்னை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் தஷ்வந்தை
சென்னை அழைத்து வர உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment