ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்ககோரிய வழக்கில்
1788 போலி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இனி அவர்களை நீக்க முடியாது ஆனால்
அவர்களை வாக்களிக்காமல் தடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் சார்பில்
தெரிவித்தனர். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது
உயர்நீதிமன்றம்.
ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள 5117 போலி வாக்காளர்களை
நீக்கக்கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு
நீதிபதிகள் சிவஞானம், ரவிசந்திர பாபு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு
வந்தது.
இதற்கு
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடவடிக்கைகள்
தொடங்கிவிட்டாதால் இந்த வாக்களர்களை இனி நீக்க முடியாது. மாறாக இந்த
வாக்காளர்களை கணக்கெடுத்து பட்டியல் தயாரித்து பூத் ஏஜெண்டுகளுக்கு
தரப்படும், அந்த பட்டியலை கொண்டு ஒருவர் இரண்டு முறை வாக்களிப்பதை தடுக்க
முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி
விட்டதால் இனி உயர் நீதிமன்றம் இனி இதில் தலையிட முடியாது, மேலும்
மனுதாரின் அனைத்து கோரிக்கைகளை மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்,
தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் ஆணையம்
மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment