மும்பை மலபார்ஹில் பகுதியில் பாகிஸ்தான் நாடு உருவாக காரணமாக இருந்த
முகமது அலி ஜின்னா வசித்துவந்த வீடு உள்ளது. இந்த வீட்டை இடிக்கவேண்டும் என
சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 2.5 ஏக்கர்
பரப்பளவு கொண்ட இந்த இல்லம் 400 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும்.
ஜின்னாவின் இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான்
வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நடந்த
பாராளுமன்ற கூட்டத்தொடரின் ‘பூஜ்ஜிய’ நேரத்தில் மும்பை சேர்ந்த சிவசேனா
பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் செவாலே இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஜின்னாவின் வீடு சதி
மற்றும் நாட்டின் பரிவினைக்கு சாட்சியாக உள்ளது. எனவே எதிரி சொத்து
சட்டத்தின் கீழ் அந்த வீட்டை இடித்துவிட்டு அங்கு சுதந்திரத்திற்காக
போராடிய தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும்.தற்போது
பொதுப்பணித்துறை ஆண்டு தோறும் அந்த வீட்டை பராமரிக்க லட்சக்கணக்கில்
செலவழித்து வருவது தேவையற்ற செலவுஇவ்வாறு அவர் கூறினார்.
இந்த
நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் இந்த
விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாகிஸ்தானின்
வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் நபீஸ் சகாரியா கூறியதாவது:- “ ஜின்னாவின்
இல்லத்துக்கான உரிமத்தை பெற பாகிஸ்தான் தொடர்ந்து தனது விருப்பத்தை
வெளிப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு
இந்தியா மதிப்பளிக்கவேண்டும். அதேபோல், அந்த இல்லத்தை பேணி காத்து தனது
கடமையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்”
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment