Latest News

  

ஆர்கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறாரா கங்கை அமரன்?

 
ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கங்கை அமரன் சசிகலா குரூப்பிடம் பையனூர் பங்களாவை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கும் சசிகலா தரப்பு அதிமுகவுக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை எடுத்துக்காட்டவுள்ள தேர்தல் என்பதால் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்த இடைத்தேர்தலில் களம் காணவுள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சசிகலா அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் தீபா போட்டியிடுகின்றனர்.. இந்நிலையில் பாஜக சார்பில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் சசிகலா குரூப்பிடம் தனது பண்ணை வீடான பையனூர் பங்களாவை பறிகொடுத்தவர் ஆவர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தபோது, பங்களாவை விற்க யோசிக்காத தன்னை சசி குரூப் மிரட்டி எழுதி வாங்கியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.