திமுக உறுப்பினர்கள் மீது சட்டசபையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டசபை கூட்டத்தில் பெரும் அமளிதுமளி
ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக
வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினையும் குண்டுக்கட்டாக
தூக்கிச்சென்று வெளியேற்றினர்.
இதில் அவர் தாக்கப்பட்டார். அவரது
சட்டையும் கிழிக்கப்பட்டது. இதேபோல் திமுக எம்எல்ஏக்கள் பலரின் சட்டையும்
கிழிக்கப்பட்டது. இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் உட்பட திமுக
எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து நேரில் முறையிட்டனர்.
No comments:
Post a Comment