Latest News

அதிமுக, திமுக, காங். கட்சிகளுக்கு ஊழலைத் தவிர எதுவுமே தெரியாது.. அமித்ஷா தாக்கு


பட்டுக்கோட்டை: அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊழலைத் தவிர வேறு எதுவுமே தெரியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கியுள்ளார். பட்டுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களிஅ ஆதரித்து இன்று அமித்ஷா பேசியதாவது:

தமிழகத்தின் வளங்களை திமுகவும் அதிமுகவும் சுரண்டிவிட்டன. அதிமுக ஆட்சியில் ரூ20,000 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எந்த ஒரு குற்றச்சாட்டுமே இல்லாமல் வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது ஆளும் அதிமுக அரசு உறங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பிரதமர் மோடி ரூ2,000 கோடியை உடனே தமிழகத்துக்கு வழங்கினார். ஆகையால் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.