நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவரசு மனைவி கயல்விழி பெயரில் ரூ.52.25 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்தும் பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் சீமான் தமக்கும் தனது மனைவிக்கும் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.8.97 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு ரூ.52.25 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.29 லட்சம் அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment