Latest News

மானியமல்லாத சிலிண்டர் விலை ரூ.27.50 அதிரடியாக உயர்வு !


மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.27.50 அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்கள் மாதம் தோறும் எரிபொருள் விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 27.50 காசுகள் உயர்த்தி அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி, தில்லியில் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.27.50 காசுகள் உயர்ந்து ரூ.545 ஆக உள்ளது. அதேசமயம், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை, டெல்லியில் தற்போது ரூ.417.82 காசுகளாக உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர் (14.2 கிலோ எடை) ஒன்றின் விலை சென்னையில் தற்போது ரூ.532 ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த ஜூலை மாதம் முதல் 4 முறை குறைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.