தகவல்தொழில்நுட்ப துறையில் முன்னணி வகிக்கும் பொருட்டு ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டு இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் வீடு தோறும் இணையதள சேவை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது குறித்து முதல்வரின் அறிக்கையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை ஆப்டிக்கல் ஃபைபெர் மூலமாக இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன் பெரும் வகையில் "பாரத்நெட்" என்ற திட்டத்தை மதிய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாக தான் செயல்படுத்த வேண்டும் என நான் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசு இத்திட்டத்தினை தமிழகத்தில் தமிழ்நாடு அரசே செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிக்கல் ஃபைபெர் மூலம் தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றபடும். ரூ 3000 கோடி செலவில் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும் இத்திட்டத்தினை செயல்படுதுவதற்கென "தமிழ்நாடு ஃபைபெர்நெட் கார்பரேசன்" என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள Internet Service Provider உரிமத்தினை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும். மேலும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணையதள சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக "இணைய வழி தொலைகாட்சி" சேவைகளும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment