Latest News

இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தியது ஏர்டெல்!


நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் சேவை வரி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் செய்யப்பட்ட அதிகப்படியான முதலீடு ஆகிய காரணங்களால் தனது இண்டர்நெட் டேட்டா சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை அதிகளவில் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சலுகைகள் ரத்து 

கட்டண உயர்வு மட்டும் அல்லாமல் ஏர்டெல் நிறுவனம், ஆன்லைன் விற்பனையில் கொடுக்கப்பட்டு வரும் சலுகைகள் அனைத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது, இதன் காரணமாகவும் இண்டர்நெட் 

விலை உயர்வு 

இதன்படி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் 10 இண்டர்நெட் டேட்டா திட்டங்களின் விலை நிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


2 ஜி இண்டர்நெட் டேட்டா 

குறிப்பாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் 30 நாட்களுக்கான 2 ஜிபி, 2 ஜி இண்டர்நெட் டேட்டா சேவைக்கான கட்டணத்தை 199 ரூபாயை மாற்றாமல் அளைவை மட்டும் குறைத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சேவையில் 199 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு 1.25 ஜிபி டேட்டா மட்டும் ஏர்டெல் அளிக்க உள்ளது.

3ஜி இண்டர்நெட் 

அதேபோல் 3ஜி இண்டர்நெட் சேவையில் 1ஜிபி டேட்டா கட்டணத்தை 249 ரூபாயில் இருந்து 255 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐடியா செல்லுலார் 

ஏர்டெல் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஐடியா செல்லுலார் நிறுவனமும் என்சிஆர் பகுதியில் டேட்டா கட்டணத்தை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.