Latest News

ஜெயலலிதா வெற்றி: ஆளுநர் ரோசய்யா, பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து


சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் ரோசய்யா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.