Latest News

  

அதிமுக அமைப்புத் தேர்தல் பொறுப்பாளர்கள் - ஜெயலலிதா அறிவிப்பு!


வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி முதல் 11 கட்டங்களாக நடைபெறவுள்ள அதிமுக அமைப்புத் தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமை அறிவித்துள்ள அறிவிப்பில் தெரிவித்திருபதாவது:

"முதல்வரும், கட்சிப் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு, வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, தேனி மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, ஈரோடு புறநகர், மதுரை மாநகர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கடலூர் மேற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாநகர், திருப்பூர் புறநகர், சேலம் புறநகர், கோவை மாநகர், நாமக்கல்,கோவை புறநகர், ஈரோடு மாநகர்,நீலகிரி, திருப்பூர் மாநகர்,கரூர். அமைச்சர் பழனியப்பன், வேலூர் கிழக்கு,விழுப்புரம் வடக்கு, வேலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, திருவண்ணாமலை வடக்கு,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தெற்கு, தருமபுரி, கடலூர் கிழக்கு, மதுரை புறநகர்.


மேலும், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 பேர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளளனர். கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், அந்தமான், புதுச்சேரி, புதுடெல்லி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாகச் செயல்படுகிறது என்பதால் அங்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் "
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.