Latest News

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!


கருவில் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளித்து ஐதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாட்டில் முதல் முறையாக ஹைதராபாத்தில் உள்ள டாக்டர்கள் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நவீன சிகிச்சை மூலம் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பினை சரிசெய்து சாதனை செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த அருண் என்பவரின் மனைவி சிரிஷா கர்ப்பமானர். இவர் மருத்துவ சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சிரிஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய பிரச்சனை இருப்பதை கண்டறிந்தனர்.பின்னர் குழந்தை பிறந்த பிறகு சிகிச்சை அளிப்பது கடினம் என்பதால், கருவிலேயே சிகிச்சை அளிப்பது குறித்து நாகஷ்வர ராவ் (குழந்தை மகப்பேறு மற்றும் இதய சிகிச்சை நிபணர்) ஆலோசனை நடத்தப்பட்டது.

12 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு, குழந்தையின் பாதிக்கபட்ட இதய வால்வை கருவிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.