தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி இங்கு தனது மூக்கை நுழைக்க பாஜக தீவிரமாகியுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஜெயலலிதாவின் நல்ல நண்பர் என்று அறியப்படும் பிரதமர் மோடி அதைச் செய்வாரா என்று தெரியவில்லை. ஆனால் இதை விட்டால் பின்னர் நல்ல சான்ஸ் இல்லை என்று தமிழக பாஜக தரப்பில் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் அரசியல் சாசனத்தின் 355வது பிரிவை அமல்படுத்த பாஜக முயலலாம் என்று தெரிகிறது.
356 என்பது மாநில அரசை டிஸ்மிஸ் செய்யப் பயன்படுத்தப்படும் பிரிவாகும். ஆனால் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப் பிடியான தீர்ப்பைத் தொடர்ந்து இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துவதில் மத்திய அரசு அவ்வளவு சீக்கிரம் முடிவெடுப்பதைத் தவிர்த்து வருகிறது. எனவே தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மோடி அரசு கொண்டு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
No comments:
Post a Comment