Latest News

மும்பையில் துப்பாக்கி முனையில் பெண் பாலியல் பலாத்காரம் !! அதிர்ச்சியில் மும்மை !!


மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள பயாந்தர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

நவ்கர் காவல் நிலைய துணை ஆய்வாளர் அபர்ணா வாட்கர் இதுகுறித்து கூறுகையில், மே 30ம் திகதி மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் பயாந்தர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் எதிரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்போது, திடீர் என்று 3 பேர் அந்த பெண்ணை காருக்குள் தள்ளி, வாயை திறந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டி காரை ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஒருவர் துப்பாக்கியை தனது தலையில் வைத்து மிரட்டியபோது, தீபக் என்பவர் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளதாகவும், தற்போது இருவரையும் தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.