Latest News

  

வறண்டு காணப்படும் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயற்சிக்கும் தாஜுல் இஸ்லாம் சங்கத்தினர் !


அதிரையில் வாழுகின்ற அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்த அதிரை செடியன் குளம் மற்றும் நமதூர் பெண்கள் பயன்படுத்தி வந்த மரைக்கா குளம் ஆகியவற்றில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையை கருத்தில் கொண்டு அதிரை பெரிய ஜும்மா பள்ளி, தாஜுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு சங்கம், பிலால் நகர் ஜமாத் ஆகியவற்றின் சார்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரை கடந்த [ 23-12-2013 ]அன்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்கள்.

தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் சிஎம்பி வாய்க்காலிலிருந்து தண்ணீரை மரைக்கா குளத்திற்கு கொண்டு வருவதற்காக இன்று காலை முதல் தற்காலிக வாய்க்கள் அமைக்கும் பணியை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மரைக்கா குளத்தில் மண்டிகிடக்கும் கருவ முள்ளுகளை அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.

இந்த பணிகளை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஜஃபருல்லா, PMK தாஜுதீன், அப்துல் ரெஜாக், தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகி B. ஜமாலுதீன் ஆகியோர் களத்தில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தபணிகளை கீழத்தெரு சங்க நிர்வாகிகள் மான் A. நெய்னா முஹம்மது, சேக்தாவூது, N.M.S. மன்சூர், மான் A. சேக் மற்றும் பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகி முகம்மது மொய்தீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.




நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.