சேதுபெருவழிச்சாலையில் அமைந்துள்ள கடற்கரையோர கிராமமான சேதுபாவாசத்திரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை மீனவர்கள் வாழ்ந்து வருகின்னர். இவர்கள் கடந்த சில வருடங்களாக தொழுவதற்காக புதிதாக மஸ்ஜீத் கட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
சேதுபாவாசத்திரம் ஜமாத்தினரின் அன்பு வேண்டுகோளை அடுத்து அமீரகவாழ் அதிரை சகோதரர்கள் குறிப்பாக சகோ. K. சேக்தாவூது அவர்களின் சீரிய முயற்சியால் அமீரகத்தில் ரூபாய் ஒரு லட்சம் [ 100,000/- ] திரட்டப்பட்டு அந்தப் பணத்தை நமதூர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் சகோ. S. ஜஃபருல்லா மற்றும் B. ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நேற்று [ 04-04-2013 ] சேதுபாவாசத்திரம் ஜமாத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
"சத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு உதவிடுவீர்" என்ற தலைப்பில் கடந்த [ 15-03-2013 ] அன்று தளத்தில் செய்தி வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உதவிகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணி குழுவினரின் சார்பாக நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment