Latest News

மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு திட்டம் Read more about மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு திட்டம்


மார்பக புற்றுநோய்  பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு திட்டம்இந்தியாவில் ஆண்டுதோறும் 90 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்குப் பலியாகி வருவதாகவும், 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை கட்டாயப்படுத்தப்படும் திட்டம் உள்ளதாகவும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8 ல் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அபாயம் ஏற்படும்  என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோய் பாதிப்பை மிகவும் காலதாமதமாக பரிசோதிப்பதன் மூலம் அவற்றை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை முன்கூட்டியே பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர். 30 வயதில் இருந்தே பெண்களுக்கு மார்பக புற்றநோய் பரிசோதனை நடத்துவது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது

தற்போது நாட்டில் 21 மாநிலங்களில் இந்தப் பரிசோதனைகளுக்கான முகாம்கள் செயற்பட்டு வருகின்றன,

தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேறுகால செவிலியர்களும் உதவியாளர்களும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Thanks: www.inneram.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.