Latest News

  

விரைவில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூடுவதுதான் சிறந்த பாதுகாப்பு

ஜப்பான் உணர்த்தும் பாடங்கள்!

ஜெம் ஆர். வீரமணி


ஜப்பான் நாட்டில் வசந்தகாலம் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும். கல்வி நிலையங்களுக்கு விடுமுறைக்காலம் அது. எங்கு பார்த்தாலும் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும். அந்த மரத்தின் அடியில் செர்ரிப் பூக்களால் விரிக்கப்பட்டிருக்கும் சிவப்புக் கம்பளத்தில் அமர்ந்து குடும்பம் குடும்பமாகக் குதூகலிக்கும் விழாவைச் செர்ரி மலர்கள் விழாக் கொண்டாட்டம் என்று அழைப்பார்கள்.
இந்த ஆண்டு, செர்ரி மலர்கள் கருப்பு மலர்களாகக் காட்சியளிக்காத குறை. அந்த விழா துக்க விழாவாக மாறிவிட்டிருக்கிறது.
சுனாமி என்கிற வார்த்தையே ஜப்பான் மொழி வார்த்தைதான். அந்த வார்த்தைக்கு ஜப்பான் மொழியில் அழிவு அல்லது பயங்கரமான ஆழிப் பேரலை என்று பொருள்.

மார்ச் 11-ம் தேதி ஜப்பானிய நேரமான மாலை மூன்று மணியளவில் ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியை ஒட்டிய கடலுக்குள் பயங்கரமான பூகம்பம். ஹோன்ஸ் மாகாணத்தில் உள்ள சென்டாய் துறைமுக நகரிலிருந்து கடலில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பூகம்ப பாதிப்புகளோடு சேர்ந்து சுனாமி பேரலைகளின் அழிவுத் தாக்கத்தால் உண்டான எதிர்பாராத உயிர், பொருள் சேதங்களை இன்னும் கணக்கிட முடியவில்லை என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன...
பூகம்பமும். சுனாமியும் ஏற்படுத்திய அழிவின் விளைவுகளில் மிகவும் கொடூரமானது, கடற்கரையையொட்டி அமைந்திருந்த அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டதுதான்.

இந்தச் சுனாமியால் ஜப்பானில் அணுமின் நிலையங்கள் வெடித்துச் சிதறி, அதன் விளைவாகக் காற்றின் மூலம் அணுக்கதிர் வீச்சு பல நாடுகளுக்கும் பரவி அந்த நாடுகளில் இருக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சத்தால் ஏராளமான மக்கள் அங்கிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அணுமின் நிலைய வெடிப்பின் தீவிரத்தை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது தெரியாமல் உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறது.

ஜப்பான் நாட்டில் 65 சதவிகித நிலப்பரப்புக்கு மேல் மலைப்பாங்கான பகுதிகளாகும். சில இடங்களில் ஓங்கி உயர்ந்த எரிமலைகளும், எப்போது அவை தீப்பிழம்பைக் கக்குமோ என்ற அச்சம் ஊட்டுவதாகப் பரவலாக அமைந்திருக்கும். அந்த எரிமலைகள் குமுறும்போதும், கடலுக்கடியில் சுனாமி போன்ற பூகம்பக் கொடுமைகள் ஏற்படும்போதும், ஜப்பானில் நவீன தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ள எண்ணற்ற கட்டடங்களும் ஊஞ்சலைப் போல ஆடி உறுதியுடன் பாதுகாப்பாக நிற்பதைக் காணலாம்.

1945-ல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டு அதனால் ஜப்பானில் அப்போது ஏற்பட்ட கொடூரங்களை - உயிர்ப்பலிகளை அப்போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போது, அந்த வரலாற்றைப் படிக்கும்போது இப்போதும் நமக்கு மனநடுக்கம் உண்டாகும். அத்தகைய கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு அடுத்தாற்போல என்ன செய்வது என்று கதறி அழாமல் முயற்சியாலும், கடும் உழைப்பாலும் தலைநிமிர்ந்த ஒரு நாடுதான் ஜப்பான்.
அங்குள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் எல்லாம் இந்தச் சுனாமியின் ஊழிக் கூத்தால் உருக்குலைந்து இனி எப்போது மீண்டும் விவசாயம் செய்ய முடியுமோ என்று தெரியாத நிலைமை. தனது மின்சாரத் தேவைக்கு அணுமின் சக்தியைப் பெருமளவில் நம்பிக் கொண்டிருக்கும் ஜப்பானில், சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் அணுஉலை வெடிப்பும், கதிர்வீச்சும் அந்த நாட்டை மீண்டும் எப்படி ஒளிரச் செய்ய முடியும் என்கிற சவாலை முன்வைத்திருக்கிறது.

இந்த நிலைமைகள் எல்லாம் மாறி அவர்கள் சகஜ வாழ்வில் கால் வைத்துத் தலைநிமிர, ஜப்பானியப் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ஜப்பானிய நிறுவனங்களின் மூலம் தங்களது நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் இன்னும் பல நாடுகளும் ஜப்பானின் இப்போதைய பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்படலாம்.

சுனாமி ஆழிப்பேரலையால் ஏற்பட்டிருக்கும் அழிவுகளிலிருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. இதுபோன்ற

தகவல் : அதிரை M. அலமாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.