Latest News

  

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது - சி.பி.ஐ அதிரடி!

2G   ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டப் பட்டு பதவியை இழந்த முன்னாள் தொலைதொடர்புத் துறை  அமைச்சர் ராசாவை இன்று (02 பிப்ரவரி 2011 ) சி.பி.ஐ கைது செய்துள்ளது.

ராசாவின் அலுவலகம், வீடு மற்றும் அவரது நண்பர்கள் அலுவலகம் என அதிரடிச் சோதனை நடத்திய சி.பி.ஐ ராசாவை அழைத்து விசராணை செய்தது. இன்று மீண்டும் ராசாவை அழைத்து விசாரணை செய்த சி.பி.ஐ அதிரடியாக ராசாவைக் கைது செய்துள்ளது.

ராசாவின் தனிச் செயலராகவும் தொலைத் தொடர்புத் துறை செயலராகவும்  இருந்த ஆர்.கே.சண்டோலியா மற்றும் சிதார்த் பெகுரியா ஆகியோரையும் சி.பி.ஐ கைது செய்துள்ளது. திமுக தலைவர் டெல்லி வருகைக்குப் பின்னால் இந்த கைது நடவடிக்கையை சி.பி.ஐ எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.